Tuesday 24 May 2011

காதல் கவிதைகள்


என்னை பார்த்து சிரித்தாள்.,
எனக்கு கரம் கொடுத்து சீராக்கினாள்.,
'காதலா?' என்றேன்.,
'இல்லை., அன்பு' என்றாள்.

எனக்கு துன்பம் என்றால், அவள் துடித்தாள்.,
'காதலா?' என்றேன்.,
'இல்லை., அன்பு' என்றாள்.

என்னுடனேயே இருந்தாள்
என் உயிர் போல் ஆனாள்.,
'காதலா?' என்றேன்.,
'இல்லை., அன்பு' என்றாள்.

அவள் மணநாள் மேடையில்,
என்னைப் பார்த்து கண்ணீர் சிந்தினாள்.
'அன்பா?' என்றேன்.,
'இல்லை., காதல்' என்றாள்... 

கண்ணீர் விட்டு அழுவது பிடிக்காது உனக்கு
அதனால்தான் கவிதை எழுதி அழுகிறேன்.. 


நலம் வாழ ...

மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத்தாண்டி வளர்ந்ததைக்கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம், எதற்கிந்த சொகம் கிளியே..

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்........




உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தானோ
நிலவின் ஒளி எடுத்து கண்கள் செய்தானோ
விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு கை ரேகை செய்தானோ...
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டு கொண்டு தங்கம் பூசி தோள் செய்தானோ

ஆனால்... பெண்ணே.... !
உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ...

No comments:

Post a Comment