Tuesday 24 May 2011

LittlE HeartS



காதல் என்ற மாத்திரைக்கு எப்போதும் இரண்டு குணம்
போட்டுக் கொண்டால் போதை கொடுக்கும்
போகப் போக தூக்கத்தைக் கெடுக்கும்...!
காதல் என்ற யாத்திரைக்கு எப்போதும் இரண்டு வழி
வந்த வழியோ வெளிச்சத்தில் குதிக்கும்
போகும் வழியோ இருளுக்குள் முடியும்
கண் மூடினால் தூக்கம் இல்லை
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை...
ஆலவிருட்சம் போல வளருது அழகுப் பெண்ணின் நினைப்பு
வெட்டி எறிந்து பார்த்தேன் மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு
என் நெஞ்சமே பகையானதே நான் வாழ்வதே சுமையானதே...
மனமே நீ தூங்கி விடு... என்னை நினைவின்றித் தூங்க விடு!


காதல் தந்த நினைவுகளைக் கழற்றி எறிய முடியவில்லை
அலைகள் வந்து அடிப்பதினாலே கரைகள் எழுந்து ஓடுவதில்லை
என்னை மறக்க நினைக்கையிலே அவளை மறக்க முடியவில்லை..
உலை மூட மூடிகள் உண்டு அலைகடல் மூடிட மூடிகளில்லை
காதலின் கையிலே பூக்களும் உண்டு..
காதலின் கையிலே கத்தியும் உண்டு...
பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா....
கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா..?

No comments:

Post a Comment