Thursday 11 August 2011

காதல் வந்த காலமெது…?


பெயர் தெரியாத பெண் குழந்தைகளையெல்லாம்
நான் உன் பெயர் சொல்லி அழைத்த போது தொடங்கியிருக்க வேண்டும்...

அல்லது...

என் பெயர் சூட்டப் பட்ட ஆண் குழந்தையை பெயர் சொல்லியழைக்க நீ தயங்கி நின்ற போதேனும் ஆரம்பித்திருக்கக் கூடும்...

இல்லையெனில்...

எப்போதும் என் கண்ணைப் பார்த்து பேசும் நீ முதன் முதலாய் மண்ணைப் பார்த்துப் பேசும் போதாவது தோன்றியிருக்கலாம்...

அதுவும் இல்லையெனில்...

கொஞ்சம் கொஞ்சமாய் பேச ஆரம்பித்த நீ கொஞ்சிக் கொஞ்சி பேச ஆரம்பித்த போது கூட நிகழ்ந்திருக்கலாம் அந்த மாற்றம்...

இவையெதுவும் இல்லையெனில்...

நம் விழிகளின் விலகாத பார்வை சற்றே விலகி உன் வெட்கத்தில் விழுந்து முத்தத்தில் நனைந்த வேளையில் தானும் சேர்ந்தே நனைந்திருக்கலாம் நம்முடனான காதல்.....

எத்தனையோ பெண்கள் இருக்கையில் என்னை மட்டும் உனக்குப் பிடித்துப் போனதெப்படி...?
இது ஆயிரம் முறை நீஎன்னிடம் கேட்ட கேள்வி...

ஒரு முறையேனும் உனக்கு சொல்ல நினைத்து சொல்லாத பதில்...

வேறு யாரைப் பார்க்கும் போதும் உயிர்க் காற்று என் உள்சுவாசம் மறுத்ததாய் இதுவரை என் நினைவில் இல்லையடி..................

No comments:

Post a Comment