Wednesday 17 August 2011

நாமும்..மரணமும்..

உன்னில்..நானும்..
என்னில்.. நீயும்..
எது நீ..எது நான்..
எது உன் ஆசை..எது என் விருப்பம்..
புவியில்..விழும்..நிழல்..உனதா..எனதா..??

இப்படி..நாமே..குழம்பியிருக்க
காலன்..வந்து
என் உயிரை..மட்டும் எப்படி பிரித்தறிவான்..

போடி...எனக்காய்..நீ சேர்த்து வைத்த..கண்ணீர்..
எல்லாம் வீணாய் ..போகும்....

பிரம்மன்..கணக்கு பொய்க்க..
வேண்டாம்..போ....!!

உனக்கு ஒரு நிமிடம்..முன்..
இறப்பேன்..
ஒரு நிமிடம்..தாண்டி..
தாமதித்து...விடாதே..
தவித்து..போவேன்!

No comments:

Post a Comment