Wednesday 17 August 2011

என் நிழலும்..நீயும்..

ஒரு நொடி ..
எனை நீ கடப்பதற்காக..
ஒரு நாள் முழுதும்..காத்திருந்தேன்..
நீ எனை கடந்த பின்..
என் நிழல் கூட காத்திருக்கவில்லை..
அதுவும்..என் மனம் போலே..உந்தன் பின்னே!!!
முதலில்..
என் மனதை..என்னிடம்..இருந்து பிரித்தாய்..
என் எண்ணங்களை..உனதாக்கினாய்..
உனக்கானாதாய்..மட்டுமே மாற்றினாய்..
நினைவுகள் முழுதும்..நீ மட்டுமானாய்..
இன்று..
என் நிழல் பறித்தாய்....
ஏனோ...உயிரை ...விட்டு வைத்தாய்..
அதுவும்..உனை பற்றி..பற்றற்று போயிற்று..
நான் இருந்ததன் அடையாளாமாய்..
இந்த கவிதையாவது..இருந்து விட்டு போகட்டுமே..!!!!

No comments:

Post a Comment