Saturday 3 September 2011

எப்படி முடிகிறது உன்னால்



எப்படி இருக்கின்றாய்
என்னைப் பிரிந்து
அழுகிறது மனம்
உன்னை நினைத்து

வலிகளை உன்னால் தாங்கிக்கொள்ள
முடிந்தது எப்படி?
இப்படி இருந்ததில்லை
ஒருநாளும் என் சொற்படி....

கவலைகளும் பனித்துளிபோலதான்
சிறிது நேரம் தங்கிக் கொள்வதினால்.........

நலமுடன் இருக்கின்றேன் என
மின்னலாய் ஒரு தடவை
வந்து சொல்லு
முழிக்கும் என் கண்கள்
நிம்மதி கொள்ளட்டும்.


உன்னை நேசித்தேன்
இல்லையில்லை சுவாசித்தேன்..

இருந்தும் உன் திருமண விழாவில்
நான் கலந்து கொள்ளவில்லை!!!...
ஏன் தெரியுமா??...
உன் திருமணவிழாவில் கலந்துகொண்டு
உன்னை வாழ்த்திவிட்டு போக
நீ என் வாழ்கையில் வந்தவள் இல்லை..
எனக்கு நீ வாழ்க்கையாய் இருந்தவள் !!!...





No comments:

Post a Comment