Saturday 3 September 2011

முற்றுப்பெறாத தற்கொலை...

பிரியமானவளே...
விழிகளால் என்னை விலை பேசியவளே..

விருப்பமே இல்லாத என் வாழ்க்கை 
வெறுப்பாகி போனது... 
பிடித்த நிறமோ கறுப்பாகி போனது...

மதுக்கிண்ணங்களில் என் மறு வாழ்வு..
வாழ்வாதாரமாய் நாம் வாழ்த்த நாட்கள்..
விழிகள் உருண்டும் உலகம் இருண்டதாய்..

அன்று உன் பார்வை பரிமாணத்தால் 
துடித்த என் உயிர்... 
துடிதுடித்துக் கொண்டிருக்கிறது இன்னும்...

ஒரு முற்றுப்பெறாத தற்கொலை 
உன்னை நான் இழந்தது..

சோகங்கள் சுகமானதுபோய்.. 
ஒவ்வொரு கணமும்... நரக ரணமாய்....
போதுமடி... போதும்.....போதுமடி...
இறப்பின் வலியை உணர்த்தியது போதுமடி...

கரை தேடும் அலைகளாய் 
இன்னும் என் காதல்... இறப்பை தேடி...

என்னவளே... 
வா... வந்து ஒரு கருணைக்கொலை செய்து விடு..
உடல் மண்ணுள் புதையட்டும்..
உயிர் உன்னில் புதையட்டும்!!!...

No comments:

Post a Comment