Saturday 3 September 2011

சிரிக்க முடியாமல்!!!..

ஆண்டுகள் பல கடந்து
நாம் சந்தித்துக்கொண்ட போது..
நாம் பேசியது..

நீ நலமா?.. உன் கணவர் நலமா??...
உன் குழந்தைகள்???...
.
..   ,,
இப்படியாக இறுதியில் 
Take Care., உடம்பைப் பார்த்துகொள்!!..  என்றேன்

பிரியாவிடை கொடுக்க 
பிரியாமல் பிரிந்து சென்றாள்..
திரும்பி பார்த்தாள்.. ஏதோ தயக்கமாய்!!..

ஓ.. நானா...
நான் நல்லாகத்தான் இருக்கிறேன்...
பச்சையாக ஒரு பொய்...

தலையை மட்டும் ஆட்டினாள்
சிரிக்க முடியாமல்!!!..

No comments:

Post a Comment