Saturday 3 September 2011

எப்படி உன்னை மறக்க முடியும்??..


நீ பேசிய வார்த்தைகள் எல்லாம்
பொய் என்று நான் உணர,,
வார்த்தைகள் மட்டும் அல்ல 

"காதலும் பொய்தான்" என்று 
உணர்த்திவிட்டாய்!!!...

உன்னை மறக்க ஒரு நொடி எண்ணினேன்!!..
அந்த ஒரு நொடிப்பொழுதும் 
உன்னை மட்டுமே நினைத்தேன்!!!..

நீ பேசிய வார்த்தை மொழிகளையே 
மறக்க முடியாதவன் 
எப்படி உன்னை மறக்க முடியும்??..

கண்மூடித்தனமாய் காதலித்தேன் 
கண்களைத்திறந்து பார்த்தபோது 
காணவில்லை அவளை!!..

என்னவளே...
தயவுசெய்து திரும்பி வராதே!!..
இழப்பதற்கு இன்னொரு இதயம் 

இல்லையடி என்னிடம்!!!..

No comments:

Post a Comment