Saturday 3 September 2011

கண்ணீர் கலந்த கனவுகளாய்

உன்னை 
எந்த அளவுக்கு பிடிக்கும் என 

எனக்கு தெரியாது...
 

ஆனால்..
உன்னைப் பிடித்த அளவுக்கு
வேற எதையும்
இந்த உலகத்தில் எனக்கு பிடிக்காது!!..


உனக்காக இந்த உலகத்தையே 
இழக்க காத்திருந்தேன்!!..

ஆனால் 

இந்த உலகத்திற்காக
என்னை இழந்து விட்டாய்.. 



பிரிந்து போன உன் நினைவுகள்
ஒவ்வொரு நாளும் என் கண்களுக்குள்
வந்து கொண்டு தான் இருக்கின்றன...
"கண்ணீர் கலந்த கனவுகளாய்"
 

பெண்ணின் வாசமும்... மோசமும்...


உனக்காக காத்திருந்த விழிகளில் 
பூத்திருப்பது புண்கள் மட்டுமே...
என் காதல் தான் நிறைவேறவில்லை 
உன்னை காதலித்தவன் என்ற 
நிறைவே போதும் எனக்கு...
பெண்ணின் வாசம் அறிந்தது உன்னால்...
பெண்ணின் மோசம் அறிந்ததும் உன்னால்...
போனதெல்லாம் போகட்டும்..
உன்னால் அழிந்தோர் 
பட்டியலில் என் பெயரும்!!!....

No comments:

Post a Comment